கார்த்திகை

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

கார்த்திகை:

செல்வியைப் பாகம் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்

மல்லிகைக் கண்ணியோடு

மாமலர்க் கொன்றை சூடிக்

கல்வியைக் கரை இலாத

காஞ்சி மாநகர் தன்னுள்ளார்

எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே.

கார்த்திகை நட்சத்திரம்

அக்கினி தேவதை, பெண் ஆடு,
அக்கினி என்றால் சுத்தப்படுத்துதல் என்ற பொருள், எந்த இடத்திலும் அனுசரித்துப் போவார்கள் என்பதும் பொருள், தாய் தந்தையை பிரிந்து வாழ்தல் அல்லது தொழிலுக்காக பிரிந்து வாழுதல் சிறப்பு, மாமா வீட்டில் வளர்ந்தேன், தாத்தா வீட்டில் கொஞ்சம் வருடம் வளர்ந்தேன் என சொல்வது கார்த்திகை நட்சத்திரம், விபத்து நட்சத்திரம், விபத்து நடந்தால் தப்பித்துவிடுவார்கள், இந்த வம்சாவளியில் பட்டை, நாமம் போட்டவர்கள் யாராவது இருப்பார்கள், ஆண் வாரிசு உள்ள நட்சத்திரம், மணவாழ்க்கை சரியில்லாதவர்களை சுட்டிக்காட்டும், அல்லது இவர்கள் குடும்பத்தில் கல்யாணம் ஆகாதவர், கல்யாணம் ஆகி பிரிந்து வாழ்ந்தவர்கள், குடும்பத்தில் தாய், தந்தை இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையை இந்த நட்சத்திரம் சுட்டிக்காட்டும், அனுபவிக்க முடியாத சொத்துக்கள், அல்லது சொத்தை விட்டுக் கொடுப்பது, சொத்துப் பிரச்சனையை சொல்லும் ஒருவராக பிறந்து இருந்தால் பாதிப்பில்லை, தாய்மையை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும், தாய்க்காக ஏங்குவார்கள், தென்னை மரம் சார்ந்த பிரச்சனை வரும், விளையாட்டுத்துறை இவருக்கு நன்மை, நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும், ஏதாவது ஒரு நீர் நிலையில் பிரச்சனை வரும் ஆதலால் நீச்சல் கற்றுக் கொள்வது சிறப்பு, இவர்கள் இல்லத்தில் பூசணிக்காய் கட்டி விடுவது சிறப்பு, இவர்களுக்கு கண் திருஷ்டி அதிகமாக இருக்கும், அம்மன் கோவில் கோவில் குண்டங்கள் அதற்கு விறகு தானம் செய்வது சிறப்பு, யாகத்திற்கு உதவி செய்வது வஸ்திரங்கள் உதவி செய்வது சிறப்பு, குடி ஆகாது, புகை ஆகாது, பாக்கு வைத்துக் கொள்வது சிறப்பு, பெண்களுக்கு சுகம் பிளஸ் துக்கம் இரண்டும் கலந்து வந்து கொண்டே இருக்கும், இவர்கள் மாவட்ட தலைநகர், மாநிலத் தலைநகர், மக்கள் கூடும் இடம் சிறப்பை தருகிறது, பொதுவாக டவுனில் வாழ்வது நல்லது, தனது சமுதாயத்தை அனுசரித்து வாழ்வது மிகவும் சிறப்பை தரும்…

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️