மகர லக்னம்

தங்களின் லக்கினம் மகர லக்கினம் மகர ராசி காரர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் குணாதிசயம் எவ்வாறு எப்படி?

1,மகரம் என்றால் இவர்களுக்கு முதல் நிலை என்னவென்றால்
தொழில் தான் இவர்களுடைய பிரதான நோக்கம்.

2, இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தாலும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

3,எப்பொழுதும் தொழிலைப் பற்றிய சிந்தனையே இருக்கக் கூடியவர்

4,தொழில் மேல் மிகப்பெரிய காதல் உடையவர் இனம்புரியாத காதல் உடையவர்

5, இவர்கள் உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தால் இவரிடம் தொழிலைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை நீங்கள் பேசிய ஆக வேண்டும் அப்படி நீங்கள் பேசாமல் விட்டு விட்டால் அவர்களுக்கு நாம் பார்க்கின்ற ஜோதிடம் நிறைவு பெறாது.

6, இவர்களிடம் ஒரு போராட்ட குணம் இருந்துகொண்டே இருக்கும் எந்த நிலையில் இருந்தாலும் அதை ஒரு கை பார்க்கக் கூடியவர் மகரம் இவர்களிடம் அதிக பவர் உண்டு

7, பவர் கிரகம் செவ்வாய் கிரகம் செவ்வாய் பவர் கொடுக்கக்கூடிய வீடு மகரம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

8,மகரம்
உழைப்பவர்கள் இருக்கக்கூடிய
இடம் மகரம்
மகரத்திற்கு உழைப்புதான் பிரதானம் கடுமையான உழைப்பு

9,அந்தத் தண்ணீர் இந்தத் தண்ணி எல்லா தண்ணிக்கும் பவர் மகரம் தான் இது எடுத்துக்கொண்ட கொடிய விதம் அவரவர் நிலையைப் பொறுத்து அமைகிறது

10, தண்ணீர் புழங்கக்கூடிய இடம் என்ன என்ன என்று பாருங்கள் தண்ணீரை வைத்து செய்யக்கூடிய தொழில் என்ன என்ன என்று பாருங்கள் அவை அனைத்துக்கும் மகரம் சிறப்பாக செயல்படும்

11, மகரம் முதலை யாகும்
முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகம் புரிகிறதா சொந்தங்களே

12, இவர்களுக்கு தண்ணீர் ஜவுளி கட்டிடத் துறை
கல்லு மண்ணு குவாரிகள்
வண்ணாந்துறை டையிங் பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்வது

13,இரும்பு தொழில்கள் வண்டி வாகனம் செங்கல் சூலை வ
எலக்ட்ரிக்கல் வொர்க் அனைத்து
மரவேலை மகரம்
கப்பல் துறையில் வேலை

14,மகர லக்கினக்காரர்கள் அனைவரும் எந்த ஒரு காரியத்திற்கு சென்றாலும் ஒரு டைம் அவர்கள் குளித்து விட்டு செல்ல வேண்டும் அடிக்கடி இவர்கள் குளித்துக்கொண்டே இருந்தால் இவர்களுக்கு யோகம் வருகிறது

15, மகரத்திற்கு தண்ணீரில் பலம் என்று சொன்னேன் இப்பொழுது புரிகிறதா

16, இவர்களுக்கு கண் சார்ந்த தொந்தரவுகள் கட்டாயமாக தருகிறது பல் சார்ந்த தொந்தரவுகள் கட்டாயம் வருகிறது

17, ரியல் எஸ்டேட் இவர்களுக்கு சிறப்பாக ஒத்து வருகிறது

18,அப்பார்ட்மெண்ட் இவர்களுக்கு சிறப்பாக ஒத்து வருகிறது
பெரும்பாலும் நில அளவை அல்லது நில அளவையை பற்றிய கருத்துக்களை அழகாக புரிந்து கொள்கிறார்கள்

19, தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேர் கணக்குப் போடுவதில் மிகச்சிறந்த கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்

20, எல்லோரும் நினைப்பது படிக்கின்ற கணக்கு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது இங்கே அது ஒரு நிலை என்றாலும்

21,இவர்கள் வாழ்க்கை கணக்கையும் வந்திருக்கக்கூடிய நிலையின் கணக்கையும்
எதிர்கால கணக்கையும் அழகாக கணித்துக் கொண்டே இருப்பார்

22,இதை செய்தால் இது வெற்றிபெறும் என்று துல்லியமாக கணிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்

23, பெரும்பாலும் இவர்கள் ஒரு கிரிக்கெட் செய்தியை காலையில் பேப்பரில் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்
இந்த டீம் தான் ஜெயிக்கும் என்று இவர்கள் சொன்னால் கட்டாயமாக ஜெயிக்கிறது

24,இதெல்லாம் என் வாழ்க்கையில் நான் இவர்களைப் பார்த்த அதிசயங்கள் இப்படி கணக்கிடுவதில் இவர்கள் வல்லவர்கள்

25,ஆற்றோரம் அமர்ந்து பரிகாரம் செய்வது
நீர் நிலையை பயன்படுத்தி பரிகாரம் செய்வது மகரம்

26,இவர்கள் வருமானத்தில் ஒரு மறைமுகம் இருந்துகொண்டே இருக்கும் ஒரு ரகசியம் இருக்கும்

27,இவர்களுக்கு முதல் முதல் குழந்தையின் மேல் ஒரு குறைபாடு இருக்கின்றது
எவ்வாறு என்றால் ஒன்று திருமண விஷயங்களில்
அல்லது அவருடைய பேச்சு வார்த்தை தன்மைகளில்
அல்லது அவருடைய வளர்ச்சியில் இப்படி ஒரு தடை பாடுகளை சந்திக்கிறார்கள்

28, இவர்கள் வீட்டிலோ அல்லது இவருக்கு தலை சார்ந்த பிரச்சனை இருக்கிறது

29, ஒன்று தலையில் ஒரு நோய் ஏற்படுகிறது
தலை சொட்டை ஆகிறது
தலை சீக்கிரம் நரைத்து விடுகிறது இவர்களுக்கு உண்டு

30, மூத்த சகோதரர்களிடம் சொத்து சார்ந்த பிரச்சனைகள் வருகிறது

31, திருவோணம் என்பது வாமணன் நட்சத்திரம்
வாமனன் வேஷமிட்டு வரும்போது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை

32,ஆதலால் இவர்கள் ஒரு நடிப்பு அல்லது அது ஒரு வேஷம் இடுகிறார் என்றார்
இவரை யாரும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவு சிறப்பாக ஒரு வேலையை செய்து விடுவார்

33, மகரம்
முதலை வீடு
இப்பொழுது இதற்கு பலன் நான் எப்படி எடுக்கிறேன் என்று பாருங்கள்

34, முதலைக்கண்ணீர் எப்படி வடிக்கும் என்றாள்

35, முதலைக் கண்ணீர் எல்லாம் விடவில்லை
கண்ணில் இருக்கும் அழுக்கை வெளியே ஏற்றுக்கொண்டிருக்கிறது

36, ஆக இவர்கள் அழுவது போல் தெரியும் ஆனால் இவர்கள் அழுவது கிடையாது

37,இவர் நடித்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது
இப்பொழுது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்

38, முதலை அமைதியாக இருக்கும் ஒன்றும் தெரியாதது போல் இருக்கும்

39, இவர்கள் நிதானமாக அமைதியாக இருந்து சிறப்பாக திட்டமிட்டு அழகாக இவருடைய காரியத்தை சாதித்துக் கொள்வார்

40, மகர லக்கினத்திற்கு காரரிடம் பொய் பித்தலாட்டம் ஆகவே ஆகாது அப்படி அவர்களிடம் யாராவது செய்துவிட்டால்
பொறுமையாக இருந்து கொண்டிருப்பார்கள் என்று அவர்களிடம் நீங்கள் அகப் படுகிறார்களோ அன்று கட்டாயம் உங்களை அடித்து போடுவார் இவர்களுடன் மிகச் சரியாக நடந்து கொள்ள வேண்டும்

41, ஆனால் இந்த விஷயத்தில் இவர்கள் நிலை வேறு
ஹா ஹா ஹா

42,மகர லக்கின குழந்தைகளிடம் பேசுகின்ற பொழுது மிகச் சரியாக பேச வேண்டும் சரியான வழியை காட்ட வேண்டும்

43, மகர லக்கினம் குழந்தை தந்தையிடம் பெரிதாக எதிர்பார்க்காது
அதை வாங்கித் தாருங்கள் இதை வாங்கித் தாருங்கள் என்று கேட்காத குழந்தை

44, ஆனால் தந்தை இவரை ஏமாற்றினால் அவரையும் பலி வாங்கி விடும்
ஹா ஹா ஹா ஹா

45, மனைவியிடமும் பெரிதாக எதையும் கேட்காது ஆனால் மனைவி இவரை ஏமாற்றி விட்டாள் நிலைமை அதோகதிதான்

46,எல்லாருக்கும்
கை நீட்டி அடிப்பார் என்றால்
படாரென்று இவர் காலால் எட்டி உதைத்து விடுவார்

47, இவருக்கு அதிகமாக கால் நீளும் ஹா ஹா

48,இவர்கள் ஹாய் ஜம் லாங் ஜம் குட் பால் ஹாக்கி கபடி விளையாடுவது விளையாட்டு இதன்மேல் பிரியும் இதுல எல்லாம் நன்றாக இருக்கும்

49,பல பேருக்கு கராத்தே சிறப்பு இவர்களுக்கு காலை நன்றாக தூக்க கூடிய சக்தி உண்டு

50, ஒருவர் நல்லது செய்கிறார் என்றார் நல்லவிதமாக நடந்து கொள்கிறார் என்றால் நம்மை உயர்வாக பேசுவதில் மகன் சிறப்பைத்தரும்
நான்கு நல்ல மனிதர்கள் இடத்தில் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்

51,அதே இவரிடம் தீயது செய்துவிட்டாள் நம்மைப் பற்றி நான்காயிரம் பேரிடம் விடுவார்கள்

52, இவர்களுக்கு பூர்வீக வீடு பழைய வீட்டை தருவார்கள்
மகரம் பழைய வீடு என்று அர்த்தம் சொத்து பிரச்சனை வருகின்ற பொழுது பழைய வீடு இவர்களுக்கு கிடைத்தால் வாங்கிக் கொள்ள வேண்டும்

53, இவர்களுக்கு பழைய வாகனத்தின் மேல் ஒரு காதல் இருக்கும் அது எவ்வளவு நிலைக்குச் சென்றாலும் அதை வெகுகாலம் வைத்திருப்பார்கள்

54,இவர்களுக்கு நாம் ஜாதகத்தில் பலன் சொல்லும்போது இவர்களிடம் கருத்துக் கேட்டால் தவறு எது இருக்கிறதோ அதை சொல்லுவார்கள்
ஹா ஹா ஹா
ஆனால் அடியேன் அதையும் நான் ரசிக்கின்றேன்

55,இவர்கள் மனதில் ஒன்று பட்டது என்றால் வெடுக்கென்று பேசுவார்கள் அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது பல நேரங்களில்

56,இவர்களுக்கு முதல் வீடு அமைவது தாமதமாக வைக்கிறது

57, இல்லை என்றால் இவர்களுக்கு மனசுக்கு பிடிப்பதில்லை அல்லது இவர்களுக்கு அமையும் மனையில் வாஸ்து குற்றங்கள் ஏற்படுகிறது

58,வீடு கட்டுவதில் இவர்கள் திட்டமிட்டு வீடு கட்ட முடியாது இவர்கள் திட்டமிடுவது ஒன்று செயல்படுத்துவது ஒன்றாக அமைந்து விடுகிறது

59,இவர்களுக்கு என்ஜினியர் மாறிக்கொண்டே இருப்பார்கள் அல்லது மேஸ்திரிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள் வீடு கட்டுவதற்கு அப்பப்பா என்ன சொல்லுவது எனது அனுபவத்தில் நான் இவர்களைப் பற்றி சிந்திப்பது ஏராளம் ஏராளம்.

60, இரண்டு வாகனத்திற்கு மேல் வைத்திருப்பார்கள் அல்லது இரண்டு வாகனம் கட்டாயமாக வைத்திருப்பார்கள்

61,அதில் ஒரு வாகனம் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்…

62,இவர் ஒரு தொழில் செய்தால் அதற்கு இவர்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்

63,இவர்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏற்றம் இறக்கம் உடையவர்களாக இருப்பார்கள் ஒரே ரொட்டேஷன் ஆக இருக்காது

64, சிறிய வயது குழந்தைகளாக இருக்கும்போது இவர்களுக்கு சண்டை உணவில் தான் வரும்

65,ஒரு ஆப்பிள் தருகிறார் என்றால் முழுமையாக கொடுக்க வேண்டும் அதைப் பிரித்துக் கொடுத்தார் என்றால் இவர்களுக்கு பிடிக்காது

66,இவர்களுக்கு வாழ்விற்கு ஒரு வழியை நாம் காட்டிவிட்டால் அதில் சென்று பட்டையை கிளப்பி விடுவார்கள்….

67, இவர்கள் சிறுவயதில் குள்ளமாக இருப்பார்கள் இவரைக் குட்டையன் என்றுகூட கூப்பிடுவார்கள்

68,ஆனால் இவர்கள் வளர வளர உயரமாய் கொண்டிருப்பார்கள்
நன்கு வளர்ந்து விடுவார்கள் ஹா ஹா ஹா ஹா

69,பலப்பல இடையூறுகளைத் தாண்டி தொழில் அதிபர்கள்

70,மனைவியிடம் திட்டு வாங்காத மகரம் கிடையாது

71, சிலருக்கு கழுத்து END பிராப்ளம் வருகிறது

72, சில பேருக்கு கழுத்து ஒரு கருப்பு கோடு மாறி வந்து விடும்

73, சில விஷயங்களில் மகரம் ஒரு காரியத்தைச் செய்தால் அது சக்சஸ் ஆகும்…

74, அது என்னவென்றால் இவர் குடையைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும்
அல்லது குடையை கையில் வைத்திருந்தாலே அந்தக் காரியம் சக்சஸ் ஆகிறது

75, 3 12 21 30 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கட்டாயம் இவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்

76,3 ஆம் எண் இவர்களை சுற்றிச்சுற்றி வருகிறது
இது நான் அறிந்த ஒரு மிகப்பெரிய விந்தை

77, மேலும் இவர்களுக்கு
3….7…11…. இவர்களுக்கு எண்கள் சிறப்பாக இயங்குகின்றது

78, மூன்று பாதச்சுவடு என்பது மகரம் குறிப்பிடுகிறது

79,கார்னர் சொத்து
மூன்று ரோடுகள் சந்திக்கக் கூடிய இடம்

80, மகரம் எலி வீடு என்று சொல்வார்கள் சிறிய வயதில் இவர்கள் வீட்டில் வசிக்கும்போது எலி தொந்தரவு நிறைய இருந்திருக்கும்

81,இவர்கள் எங்கே போய் வெளியூரில் இருந்தாலும் தங்கினாலும் குரங்கு இவர் வீட்டைத் இவர் இருக்கக்கூடிய பகுதிக்கு தேடி வருகிறது

82,இவர்கள் ஹனுமான் வழிபாடு செலுத்துவது சிறப்பு அடைகிறது

83, இவர்கள் எவ்வளவு பெரிய வீடு கட்டினாலும் அந்த வீட்டில் ஏதாவது ஒரு பகுதியில் எலி வங்கு போட்டு விடுகிறது

84,இவர்கள் வீட்டுக்கு முன்பு உள்ள சாக்கடையில் எலி வங்கு இருக்கும்.

85, உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடியது மகரம்
அல்லது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மகரம்….

86, மகரம் என்பது வண்ணாந்துறை என்று சொல்லுவது வழக்கம்

87, இவர்கள் வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தால்கூட
இவர்கள் வீட்டில் யாராவது ஒரு வயதானவர் வந்து துவைத்து கொடுத்து செல்வார்

88, அப்படி செய்வது இவர்களுக்கு ஒரு பரிகாரமாக அமைகிறது என்பதும் உண்மை

89,வண்ணார் சொத்தை வாங்குவது இவர்களுக்கு யோகத்தை தருகிறது

90,டையிங் வாஷிங் சோப்பு தொழில் இவர்களுக்கு சிறப்பு தருவது இதனால்தான்

91, இவர்கள் வீடு பெரும்பாலும் கொஞ்சம் அவுட்டரில் அமைகிறது

92, வீட்டு அருகில் ஏதாவது ஒரு சத்தம் வந்து கொண்டே இருக்கிறது ஒரு மிஷின் சவுண்ட் அல்லது ஏதாவது ஒரு சவுண்ட் வருகிறது

93,இவர்கள் பூர்வீகத்தில் ஒருவர் விவசாயம் தொழில் செய்தவர்கள் கட்டாயம் இருப்பார்

94,இவர்கள் குழந்தைகள் கலைகள் சார்ந்த விஷயங்களில் அற்புதமாக இருப்பார்கள் பாட்டு சங்கீதம் நடனத்தில் தேர்ச்சி பெறுவார்கள்

95,மூன்றாமிடம் குரு 5-ஆம் இடம் சுக்கிரன்
இளையராஜா எஸ்பிபி பாடல்கள் மேல் உயிராக இருப்பார்கள் இசைப் பிரியர்கள் இவர்களே
ஹா ஹா ஹா ஹா

96, இவர்கள் ஒரு சொத்து வாங்கினால் அந்த சொத்தில் ஒரு புளியமரம் வந்துவிடுகிறது

97, சில பேர் புளிப்பு சார்ந்த உணவுகள் இவர்களுக்கு பிடிக்கிறது

98,இவர்கள் வீடு கட்டுகின்ற போது அங்கே ஒரு மரம் இருக்கும் அந்த மரத்தை அறுத்து எடுத்து விட்டு வீடு கட்ட கூடிய சூழ்நிலை பெரும்பாலும் ஏற்படுகிறது

99, இவர்கள் வீட்டில் மரப் பொருள்களுக்கு அடிக்கடி செலவு ஏற்படுகிறது

100, இவர்கள் வீட்டில் படியில் ஒரு விரிசல் ஏற்படுகிறது அல்லது படி அருகில் ஒரு சிறிய விரிசல் ஏற்படுகிறது

101,இவர்களுக்கு சித்தப்பா இருந்தால் அவர்கள் வீட்டில் திருட்டுப் போகும் அல்லது மூத்த சகோதரர் வீட்டில் ஒரு நாளாவது திருட்டுப் போகும்

102, இவர்கள் வீட்டில் நகை அடகு கடைக்கு போகும் வரும் போகும் வரும்
அல்லது பேங்கில் அடகு வைப்பார் திருப்புவார் மீண்டும் அடகு வைப்பார் திரும்புவார்
ஹா ஹா ஹா

103, இவர்கள் நகையாக வைத்திருந்தால் அது அடகுவைத்து திருப்பி விடலாம்

104, இவர்கள் தங்க பிஸ்கட் வைத்து இருந்தால் திடீரென்று விற்றுவிடுவார்கள்

105, இவருக்கு ஒரு பிரச்சனை வந்தால் தங்க பிஸ்கட் வீட்டில் இருந்தால் அதன் மேல் தான் இவருக்கு கண்ணு ஏற்படும் அதை விற்று விட்டால் என்ன என்று சொல்வார்கள்

106, இவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு கொழுப்பு கட்டி வரும்

107,குப்பை வண்டி எடுத்து வருபவர்களிடம் ஒரு பிரச்சனை வந்துவிடும் அந்தக் குப்பையை வெளியேற்றுவதில் ஒரு சிலருக்கு பிரச்சனை ஏற்படுகிறது

108, கார பிரியர்கள் ஊறுகாய் பிரியர்கள்

109, இவர்கள் சிலகாலம் அசைவமாக இருந்தாலும் சைவமாக மாறி வாழ்கிறார்கள்

110, சைவமாக இவர்கள் வாழ்ந்தால் அசைவமாக மாறி வாழ்கிறார்கள் மாற்ற வேண்டிய சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது

111, இவர்களுக்கு முழங்கால்வலி உண்டு

112, எலும்பு சார்ந்த பிரச்சனைகள் இவருக்கு வருகிறது

113,வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்கள்
இவர் மனைவி நீங்கள் சம்பாதிப்பதை மட்டும் பாருங்கள் என்று சொல்லுவார்கள்

114, அதனால் இவர்கள் அப்படி திடீரென்று மாறி விடுவார்கள்

115, இவர்கள் மனைவியிடம் பணம் நகையை நைசாக பேசி வாங்கிவிடுவார்கள்
அவர்களும் இவர் கேட்டவுடன் கொடுத்துவிடுவார்கள்
ஹா ஹா ஹா ஹா

116, இவர்கள் மனைவி
ஹா ஹா ஹா
எப்படி என்னிடம் பணம் கேட்டார் எப்படி என்னிடம் நகை கேட்டார் என்று எனக்கு தெரியவில்லை எப்படி கொடுத்தேன் என்று என்னிடம் புரியவில்லை சொன்னவர்கள் ஏராளம் ஏராளம்

117,எப்படியாவது மனைவியிடம் பணத்தை வாங்கி விடுவார்…

118, இவரிடம் உள்ள திறமைக்கு அளவே இல்லை

119, இவர்கள் வீட்டில் பிறந்தவர்கள் இவர் ராசி லக்னம் எதுவோ அதேபோல் இவருக்கு பெறக்கூடிய குழந்தைகள் அல்லது இவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிடுகிறது..

120,1+2+சனி பகவான்
ரகசியம் தாங்காது, ஜோதிடத்தில் ஆர்வம், குறி கேட்பதில் ஆர்வம், அதிகம் பேச விரும்புபவர்.

121,3+12+குரு பகவான்
இளைய சகோதரத்தால் விரையம், சகோதரர் வெளிநாடு செல்வார், சகோதரர் பிறக்கும்போது ஒரு கர்மம் நடக்கும்

122,4+11+செவ்வாய் பகவான்
தாய் மூத்தவர், தாய் தந்தை வழியில் இரண்டு திருமணம் ஒன்று, பெண்களால் தொல்லை, பெண்கள் எதிரி, வீடு வண்டி வாகனம் உண்டு.

123,5+10+சுக்கிர பகவான்
முதல் குழந்தை பிறந்தவுடன் தொழில் நடக்கும் , வீட்டில் ஒரு கருமம் முதியோர்கள் கர்ப்பம் நடக்கும்.

124,6+9+புதன் பகவான்
கடன் வாங்க கூடாது, ஜாமீன் போடக்கூடாது, தந்தை வழி சொத்தில் ஒரு வழக்கு உண்டு, உத்தியோகம் தேடி வரும்

125,7+சந்திர பகவான்
உறவில் திருமணம், திருமணம் முடிந்தவுடன் இட மாற்றம், மனைவி அழகாக இருக்கும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவு, வயது மூத்த பெண்களுடன் உறவு அல்லது திருமண சிலருக்கு ஒத்து வருகிறது.

126,8+சூரியன்
இவர்கள் மெயின் ரோட்டில் சொத்து வாங்கக்கூடாது, அரசு அபகரிக்கும், அரசாங்க வழக்கு, அரசாங்க தண்டத்தொகை உண்டு, அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கவனம் தேவை இந்த நாட்களில் பெரும்பாலும் சில விபத்துக்கள் நடக்கிறது.

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️